சனிக்கிழமை சங்கதி

இந்த ஆராய்ச்சியை ஒரு 64 மாணவச் செல்வங்கள் கிட்ட பண்ணியிருக்காங்க. சரக்கு உள்ள போனபின்ன, ரத்ததில ஆல்கஹால் ஏறிப்போய் சீரான எதையும் க்ரஹிச்சுக்கிர தன்மையை மூளையிலிருந்து கழட்டி விட்டு கன்ஃப்யூஸ் பண்ணிடுதாம். அதனால், அழகி யார் அரக்கி யார் என்ற வித்தியாசம் தெரியாமல் போய்விடும் என்கிறார்கள். பெண்களுக்கு இந்த மேட்டர் சுத்த மோசம். தண்ணியடிச்ச அவங்கதான் ரொம்பவே குழம்பி போறாங்களாம். ராமனுக்கும் ராவணனுக்கும் வேறுபாடு காணத் தெரியாமல் சீதைகள் ராவணனோடு போய்டராங்கலாம். மணிரத்னம் பட எஃபக்ட்.
நாட்டுல நிறைய பேருக்கு கல்யாணம் ஆகாம கஷ்ட்டப்படராங்களே, பொண்ணுப் பார்க்கவோ, மாப்பிளை பார்க்கவோ கூட்டிகிட்டு போகும்போது ஒரு இருநூறு குடுத்து அழைச்சிகிட்டு போய்ட்டா எல்லாம் சரி ஆய்டுமோ? நல்ல ஐடியா இல்ல.
இந்த சரக்கு செய்தியையும் படத்தையும் வழங்கியவர்கள்: http://gizmodo.com/5616197/the-secret-of-beer-coggles-discovered
6 comments:
//ஒரு இருநூறு குடுத்து அழைச்சிகிட்டு போய்ட்டா எல்லாம் சரி ஆய்டுமோ// அப்புறம் காலம் பூரா மலை எறங்க எறங்க ஏத்தீட்டே இருக்கனுமா..
படம் ஜோரு. நடையும் கலக்கல்
மக்களுக்கு அடிச்சதக்கப்பறம் வருமே அமெரிக்கன் இங்கிலிசு , எங்கிருந்து வருமோ அந்த வெக்காபலரி...தயார் பண்ணறப்பவே இதுக்கு எதாவது வஸ்து தனியா கலக்குறாங்களா ?.
ஆமாம் பத்மநாபன் சார். அப்புறம் ஒரே போதையா இருக்கும்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.
சரக்குல இவ்ளோ மேட்டரு இருக்குதா ?
சரக்கு அடிச்சவங்களோட மண்டை சரக்கு மாறிப் போய்டும்ன்னு சொல்றாங்க மாதவா....
அன்புடன் ஆர்.வி.எஸ்.
மகிஷாசுரன் வதத்துக்கு முன்னால்,அம்பாள் கூட மது அருந்திவிட்டு தான் அவனைக் கொன்றாளாம். அவள் லோக மாதா இல்லையா? சுயநினைவில் இருந்தால் மகிஷனை,தாயுணர்வோடு கொல்லாமல் விட்டு விடுவோம் என்று தான் தன்னை மறக்க மதுவை நாடினாளாம்.
ழகரம் வர தண்ணி அடிப்பது ஒரு வழி எனத் தெரிந்து கொண்டேன்.நல்ல பதிவு
நன்றி வானவில்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.
Post a Comment